Wednesday, September 22, 2010

கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்



வாழ்கையில் பலவிதமான் கஷ்டங்கள் பிற்காலத்தில் வரமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.


இளமையில் கஷ்டப்படவேண்டும்,அதுமட்டுமல்ல இனம்புரியாத எதிர்பாரத கஷ்டங்கள் வராமல் இருக்க திட்டமிட்ட கஷ்டங்கள் படலாமே.காலை நான்கு மணிக்கே எழுவது கஷ்டம் ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல்,குடிஇருக்க விடு இல்லாமல் கஷ்டபடாமல் இருக்க படுக்கையை விட்டு நான்கு மணிக்கே எழலாமே, உடலில் முகுகு வலி, மூட்டு வலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்ற ஒழுங்கான கஷ்டம் படலாமே.

பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் படாமல் இருக்க சமையல் என்கின்ற கஷ்டபடலாமே.

ஒழுங்கற்ற எதிர்பாரத கஷ்டத்தை தவிர்க்க திட்டமிட்ட
கஷ்டங்கள் படுவது நல்லதே.

பிள்ளை பேறு கூட கஷ்டம் தான்,தாய் அதை படாமல் இருந்தால் நாம் வந்தே இருக்க முடியாது. ஆனால் இளைய தலைமுறை ஜாலியாக இருக்கவே விரும்புகிறது. கஷ்டமே இருக்க கூடாது என்று கனவு காண்கிறது.சின்ன வண்டு ஒன்று கூட்டில் இருந்து வெளியேறும் போது அவஸ்தையுடன் தான் பயணத்தை ஆரமிக்கிறது.இதை மாணவர்க்கு உணர்த்த ஆசிரியர்
ஒரு வழி செய்தார் கூட்டில் இருந்து அது வெளிவரும் துயரத்தை பார்க்கட்டும் என்று மாணவர்கள் மத்தியில் விட்டுவிட்டு வெளியே போனார்.,அதன வேதனையை கண்ட ஒரு மாணவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்து கொண்டு அது வெளியேறும் ஓட்டையை பெரிதுபடிதினான்.அது சுலபமாக வெளியே வந்து விட்டது,மாணவன் மகிழ்ந்தான்,ஆனால் வண்டு மகிழவில்லை.வெளியே வந்ததும் அதனால் பறக்க முடியவில்லை. ஏன்?..

அதன சிறகுகளை அசைக்க கூட முடியவில்லை,செய்தி அறிந்ததும் அதன காரணம் கண்டுபிடித்தார்.கூட்டில் இருந்து சிறிய துளை வழியாக வெளியேற சிரமபடும்போது தான் அது தன் சிறகுகளை அசைத்து அசைத்து பழகுகிறது.அதற்கு வாய்ப்பே இல்லாததால் சிறகுகளை அசைக்க அதற்கு தெரியவே இல்லை.

சிரமங்கள் நம்மை பலபடுதுகின்றன.கஷ்டங்கள் நம்மை வலுபடுத்துகின்றன துயரங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன.எதிர்பாரத சிரமங்களை தவிர்க்க எதிபார்க்கும் சிரமங்களை ஏற்று கொள்ளுங்கள் ஆகவே,

 "கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்'

 வெற்றி நிச்சயம்...

No comments:

Post a Comment