Monday, September 6, 2010

ஊக்கமருந்து : 4 மல்யுத்த வீரர்கள் சிக்கினர்

புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இருந்த இந்திய மல்யுத்த வீரர்கள் 4 பேர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் அர்ஜூனா விருது பெற்ற ராஜீவ்டோமரும் ஒருவர் என்பது கூடுதல் வியப்பு. வேர்ல்டு அண்ட டோப்பிங் ஏஜென்சி மூலம் தடை செய்யப்பட் மருந்து பொருள் மெத்திலெக்ஸ்னாமின் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே 2 நீச்சல் வீரர்கள் சிக்கிய தருணத்தில் மேலும் 4  மல்யுத்த வீரர்கள் சிக்கியிருக்கின்றனர். ராஜீவ்டோமருக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறும் வாய்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment