Tuesday, September 21, 2010

சிரிக்கலாம் வாங்க-435:::| Rumour..!!

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும்விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடியவிஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.
"ஐயாஎதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோஎதனால் நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோஎதை அறிந்து கொள்ளாததால் நமக்குநஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லைகுறுகிய வாழ்க்கையில்தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனஅதில் நம்கவனம் செலுத்தலாமேஎன்று
சாக்ரடீஸ்
 சொல்லவந்தவர் 
அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர்சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதைஅறிய நாம் உண்மையில் முயல்கிறோமாநமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும்விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?
மற்றவர்கள் விஷயங்களையும்அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர்நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம்ஒருவித அலட்சியம் தானாக வந்துவிடுகிறதுஅதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில்பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம்என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம்சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான்அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார்.அவன் மன்னிப்பு கோரினான்ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில்ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்துகாற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான்குரு சொன்னார். "சரி இப்போது போய்அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான்இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம்எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோஅதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"
"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டுவர முடியவில்லைமற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்கவிட்டு வந்திருக்கிறாய்அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்துஎன்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோநீ மன்னிப்பு கேட்பதன் மூலம்அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்ததுகண்ணீர் மல்கவெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர்மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம்பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமாவிளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர்பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச்செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம்உண்மையைத் தானே சொல்கிறோம் என்றுமற்றவரின் பலவீனமான உண்மைகளையும்நல்லதல்லாத உண்மைகளையும்சொல்லக்கூடும்அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோவெளியே நம்மைப்பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில்இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள்நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன்எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்எத்தனையோபலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள்மற்றவர்களைப் பற்றி நாம்சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும்ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள்நாமும் செய்கிறோம்இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரியஆர்வம் காண்பிக்காதீர்கள்சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம்காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள்.அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போதுஉதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள்அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம்அதுவாகத் தான் இருக்க 

No comments:

Post a Comment